தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-10-12 13:39 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா கட்டாரிப்பட்டியில் அரசு உயர்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்