சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஓலைப்பட்டி கிராமம் பாரப்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கடந்த 7 மாதமாக முறையான பராமரிப்பின்றி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து குடிநீரை பயன்படுத்துவதால் முதியவர்கள், குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-முருகேசன், பாரப்பட்டி, சேலம்.