சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்

Update: 2022-10-05 17:24 GMT

நெடுங்காடு கொம்யூன் திருவேங்கடபுரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியின் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் வினியோகிக்கும் அவல நிலை உள்ளது. மக்களுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்