புதிய குடிநீர் குழாய் வேண்டும்

Update: 2022-10-02 14:52 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி வாய்மேடு கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதன்காரணமாக குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்படும் அந்த குழாயை அகற்றிவிட்டு புதிய குழாய் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்