குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-10-01 13:52 GMT

கோவை மாநகராட்சி 36-வது வார்டு வடவள்ளி பெரியார் நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு, 15 நாட்களுக்கும் மேல் ஆகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்