குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?

Update: 2022-09-29 12:33 GMT

அரியலூர் கவரை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினமும் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் குழாய் 10 முதல் 12 அடி வரை குழியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதில் இறங்கி குடிநீர் பிடித்து வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய்கள் அனைத்தையும் மேல் பகுதியில் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்