தேங்கும் தண்ணீரால் பழுதாகும் சாலை

Update: 2022-09-26 13:57 GMT

கோவை மாநகராட்சி 38-வது வார்டு வடவள்ளி இந்திரா நகரில் சாலையோரம் சிறுவாணி குடிநீர் குழாய் வால்வு உள்ளது. இதில் இருந்து தினமும் தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. ேமலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சாலை பழுதடைந்து வருகிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் வால்வை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்