தண்ணீர் புகுவதால் அவதி

Update: 2022-09-25 14:28 GMT

ஊட்டியில் ஹில்பங்க் அருகே அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் அலுவலர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக விஷ ஜந்துகளின் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் கட்டிடத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது மழைநீர் உள்ளே புகாத வகையில் தடுக்கவோ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்