அடிபம்பு சரிசெய்யப்பட்டது

Update: 2022-07-14 12:02 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் திருவாரூர், நாகை பகுதிக்கு செல்ல பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டிருந்த அடிப்பம்பு உடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் அடிப்பம்பு மூலம் குடிநீர் வசதி பெற்று வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைந்த நிலையில் இருந்த அடிப்பம்பை சரிசெய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்