வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-23 13:31 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை அடுத்த பிள்ளை பெருமாள்நல்லூர் பகுதியில் குடமுருட்டி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதன்காரணமாக வாய்க்கால் முழுவதும் நாணல், செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வயலில் தேங்கும் மழைநீரை வாய்க்கால் மூலம் வெளியேற்றவும் முடியவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்