சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2022-09-22 14:02 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டி பஸ் நிலையத்திற்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து இங்கிருந்து கரூர், திருச்சி, தரகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் பயணிகள் தாகம் தீர்க்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்