குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-22 09:40 GMT

வில்லுக்குறி அருகே பொட்டரற்று குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள தண்ணீர் மூலம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது இந்த குளம் பராமரிக்கப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் குளத்தின் மதகுகளும் பழுதடைந்து உள்ளன. குளத்தில் போதிய தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அவானிஸ் ஆன்டனி ராய், வில்லுக்குறி.

மேலும் செய்திகள்