திருச்சி மாவட்டம், வளவனூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காவிரி குடிநீர் கிடைக்காததால் இப்பகுதி பொதுமக்கள் போர்வெல் தண்ணீரை குடித்து வருகின்றனர். இதனால் குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியை ஆய்வு செய்து காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.