சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா காஞ்சிரங்குளம் கிராமத்தில் கருப்புச்சாமி கோவில் அருகில் உள்ள மடையில் சுமார் 150 அடி நீளத்திற்கு வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் இருபுறங்களிலும் சுமார் ஆறு அடி உயரத்திற்கு மேடாக உள்ளது. இதனால் இரு புறங்களிலிருந்து மண் சரிந்து வாய்க்கால் மூடிவிடுகிறது. இதனால் தண்ணீர் தடைபடுகிறது. எனவே வாய்க்காலின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும்.