கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி எம்.ஜி.ஆர். நகர் பகுதி பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அங்கு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் மோட்டார் பழுது பார்ப்பதற்காக எடுத்துச் சென்றனர். அதன் காரணமாக இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவது தடைபட்டது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.