புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்குத்தொண்டைமான் ஊரணியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் தற்போது பயன்பாட்டிலும் உள்ளது. . மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் அருகே அங்கன்வாடி மையம், அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.