குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-07-12 13:47 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசேரி ஆதிதிராவிடர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நலன்கருதி அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதில் இருந்து பொதுமக்கள் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை வாய்மொழியாகவும், மனு மூலமாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்