புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிதண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறும் குழாய் உடைந்து தினமும் தண்ணீர் ஆறு போல் ஓடி வீணாகி வருகிறது. மருத்துவமனை நுழைவுவாயிலில் இந்த தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.