வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-09-05 13:05 GMT

பைங்குளம் பேரூராட்சிக்குட்பட்ட முக்காடு பகுதியில் உள்ள அம்சி ஏலாவில் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது இந்த ஏலாவில் இருந்து உபரிநீர் வடிந்து வெளியேறும் வடிகாலை ஆக்கிரமித்து அடைத்து வைத்துள்ளனர். இதனால் அம்சி ஏலாவில் புதர்கள் வளர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வயல்வெளிகளில் இருந்து உபரிநீர் வெளியேற தகுந்த வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்