புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கோவனூர் ஊராட்சி கிராமத்தில் மேக்கினிப்பட்டி ஆதிதிராவிடர் நல குடியிருப்பு பகுதியில் உள்ள அடிபம்பு பல ஆண்டுகளாக சேதமாகி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.