புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், பணபட்டி ஊராட்சி மருதாந்தலை அரசுமேல்நிலைப்பள்ளியின் வெளி புறத்தில் காவிரி தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இந்த தொட்டி ஆளமாகவும் தண்ணீர் நிறைந்து உள்ளதால் இதில் மாணவர்கள் தவறி விழுந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனடியாக மூடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.