குடிநீர் வசதி இல்லை

Update: 2022-09-03 12:44 GMT

பந்தலூர் அருகே கூவமூலா ஆதிவாசி காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி சரிவர செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் குடிநீருக்காக காலி குடங்களுடன் நீண்ட தொலைவுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ஆதிவாசி மக்களின் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்