குடிநீர் பற்றாக்குறை

Update: 2022-09-02 14:24 GMT

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி பொன்னியாக் கவுண்டன்புதூர் எதிரே உள்ள பகுதியில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களின் தேவையை பூர்த்தி வகையில் அங்கு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்