குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-09-02 12:37 GMT

கொளப்பள்ளி பஜாரில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதன் காரணமாக சாலையோரம் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் சேறும், சகதியுமாக காணப்படுவதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே அங்கு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்