விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா டி.கன்சாபுரம் கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்து பல நாட்கள் ஆகிறது. அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். வினியோகிக்கப்படும் நீரும் உப்பு நீராக உள்ளது. கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியும் பழுதாகி நீர் ஏற்ற முடியாத நிலையில் உள்ளது. எனவே இப்பகுதியில் நீர்தேக்க தொட்டியை சரிசெய்து சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.