சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் பழுதாகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இப்பகுதியினர் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாய் பழுதாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.