பயனற்று கிடக்கும் அடிபம்பு

Update: 2022-08-31 14:10 GMT
கரூர் - வாங்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு அடிபம்பு மக்கள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த அடிபம்பு நீண்ட நாட்களாக பயனற்று கிடக்கிறது. மக்கள் இதைப் பயன்படுத்தாததால் அடிபம்பை சுற்றிலும் புல் மற்றும் செடிகள் முளைத்துள்ளன. இதனால் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்களும் நடமாட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அடிபம்பை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்