வாய்க்காலில் படர்ந்த செடி, கொடிகள்

Update: 2022-08-30 12:30 GMT

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை, வஞ்சியம்மன் கோவில் தெரு வழியாக முக்கிய வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் இந்த வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர் சென்று வருகிறது. இந்நிலையில் வஞ்சியம்மன் கோவில் தெரு வழியாக செல்லும் வாய்க்காலில் முட்செடிகளும், கொடிகளும் அதிகளவு வளர்ந்துள்ளன. மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு இவை மிகவும் தடையாக இருக்கும் என்பதால், வாய்க்காலில் படர்ந்துள்ள செடி,கொடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்