வீணாகும் குடிநீர்

Update: 2022-08-29 12:30 GMT
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மாவலிப்பட்டி பகுதி வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான தண்ணீர் தினமும் வீணாகி வருகிறது. இதனால் அருகில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்