செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் குடிநீர் அதிகளவு வெளியேறி சாக்கடையுடன் கலந்து வீணாகிறது. இதன் விளைவாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடைந்த குழாயை சரி செய்ய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா?