சேலம் மாநகராட்சி 24-வது வார்டுக்குட்பட்ட கந்தம்பட்டி மிட்டாகாடு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை சரி செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் குழாயை சீரமைத்து தினமும் குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?