குடிநீர் வசதி வேண்டும்

Update: 2022-08-23 10:43 GMT

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் சிசிச்சைக்காக வருபவர்கள், அவர்களின் உறவினர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் தண்ணீரை தேடி அலைய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுதுறை ஆஸ்பத்திரியில் முறையான குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்