பயனற்ற ஆழ்துளை கிணறு

Update: 2022-08-22 15:42 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூர், சொட்டையூர் பொதுமக்களின் நலன் கருதி முத்தனூர் வெள்ளதாரை பகுதியில் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அருகாமையில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு முத்தனூரில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு முத்தனூர், சொட்டையூர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மின்மோட்டோருக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்ட மின்வயர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. அன்று முதல் இன்று வரை மின் வயர் இணைப்பு கொடுக்காமல் அப்படியே பழுதடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்