குடிநீர் தொட்டி, கிணற்றை பராமரிக்க வேண்டும்

Update: 2022-10-05 11:12 GMT

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடுமங்கலம் ஊராட்சியில் 1968-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறக்கப்பட்டது. அந்தத் தொட்டிக்கு அருகில் போர்வெல் கிணறு உள்ளது. அந்தக் கிணறு மூடி இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. அந்த நீர்த்தேக்கத் தொட்டி மூலம் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கிணற்றை முறையாக பராமரிக்காமல் சுகாதார சீர்கேடாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டி, கிணற்றை பராமரிப்பார்களா?

-சந்தோஷ்குமார், நாயுடுமங்கலம். 

மேலும் செய்திகள்