கூடுதல் பஸ் இயக்குவார்களா?

Update: 2023-02-15 17:15 GMT

சோளிங்கர் பஸ் நிலையத்துக்கு ஆற்காடு பஸ்சில் ஏற காலை நேரத்தில் பலர் வருகின்றனர். அந்தப் பஸ்சில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் சிலர் தங்களின் புத்தகப்பையை போட்டு இடம் பிடிக்கின்றனர். அதே நேரத்தில் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் தங்களின் புத்தகப்பையை போட்டு இடம் பிடிக்கின்றனர். இதனால் இரு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுகிறது. அவ்வாறு மாணவ-மாணவிகள் இடம் பிடிப்பதால் மற்ற பயணிகளுக்கும் அமர இடம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகளின் நலன் கருதி சோளிங்கர்-ஆற்காடு இடையே காலை நேரத்தில் கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தமிழரசு, சோளிங்கர்.

மேலும் செய்திகள்