விபத்து எச்சரிக்கை பலகை வைப்பார்களா?

Update: 2023-11-05 17:32 GMT

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் ஊராட்சி 4-வது வார்டு சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரம்புக்கடை அருகில் போதிய மின் விளக்கு வெளிச்சம் இல்லாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் சோலாரில் இயங்கக்கூடிய சிக்னல் விளக்கு மற்றும் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்கு அமைக்க வேண்டும். மேலும் விபத்து பகுதி என எச்சரிக்கை பலகை வைப்பார்களா?

-மு.மணி, வாலாஜா. 

மேலும் செய்திகள்