அரசு பஸ்களை பராமரிப்பார்களா?

Update: 2022-09-16 11:05 GMT

வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்ற ஒரு அரசு பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள், பயணிகள் பயணம் செய்தனர். சிறிது தூரம் சென்றதும் நடுவழியில் பஸ்சுக்கு அடியில் இருந்து ஒரு சத்தம் வந்தது. டிரைவர் கீழே இறங்கி பார்த்தபோது, ஒரு இரும்பு ராடு ஒன்று துண்டாகியிருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு பஸ் சாய்வாக நின்றது. பஸ்சில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அனைவரும் கீழே இறங்கி விட்டனர். எனவே அரசு பஸ்களை போக்குவரத்துக்கழக பணிமனை நிர்வாகம் முறையாகப் பராமரிக்க வேண்டும்.

-மா.மதன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி