பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-01-25 11:21 GMT

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் வேலூரை நோக்கி செல்லும் பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் இருந்த சிறிய நிழற்கூடம் பாழடைந்த நிலையில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதை இடித்து விட்டனர். அதன்பிறகு அங்கு இன்னும் பயணிகள் நிழற்குடை கட்டவில்லை. அந்த இடத்தில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து பழக்கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள், இனிப்புக்கடைகள் என பல கடைகளை வைத்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

-ராஜமாணிக்கம், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி