புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-06-02 12:38 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சியில் ரூ.4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து பல மாதங்கள் ஆகி விட்டன. அதை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் வைத்துள்ளனர். இதனால் திமிரி பஜாரில் நடுரோட்டிலேயே பஸ்கள் நிற்கின்றன. இதனால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திமிரி புதிய பஸ் நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமா?

-வக்கீல் ச.சசிகுமார், திமிரி.

மேலும் செய்திகள்