நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதி மற்றும் வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதிகளில் அனுமதி இன்றி சாலையோரம் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இது மாதக்கணக்கில் இருப்பதால் காற்று அடித்தால் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உருவாகலாம். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே ஆபத்தான நிலையில் உள்ள சாலையோர பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.