ஆற்காடு நகரத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்ட நெரிசல் காணப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணியால் மூடப்பட்டுள்ளது. இதனால் தனியார், அரசு பஸ்கள் பஸ் நிலையம் செல்லாமல் வெளியிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. பஸ் நிலைய பராமரிப்பு பணிகளை உடனடியாக முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-சண்முகம், ஆற்காடு.