ரெயில் நிலைய நடைமேடை நீளம் அதிகரிக்கப்படுமா?

Update: 2023-01-11 17:04 GMT

சோளிங்கர் (பாணாவரம்) ெரயில் நிலையத்தின் நடைமேடை எண்:2 மற்றும் 3 ஆகியவற்றின் நீளம் குறைவாக இருப்பதால் ஏலகிரி, லால்பாக், காவேரி மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பெண்கள் பயணிக்கும் பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ெரயிலில் ஏறி இறங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பாணாவரம் ெரயில் நிலைய பிளாட்பார எண்:2 மற்றும் 3 ஆகியவற்றின் நீளத்தை அதிகரிக்க ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சுமதி, வீரராகவபுரம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி