காட்பாடியை அடுத்த கரசமங்கலம் கிராமத்துக்கு 2 மினி பஸ்கள் விடப்பட்டன. அந்த மினி பஸ்கள் கிராமத்துக்கு 2 அல்லது 3 முறை மட்டுமே வருகின்றன. அதில் கொல்லைமேடு, எட்டிக்குப்பம், கங்கநாதபுரம் மற்றும் ஒரு சில கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை கூட வருவதில்லை. மற்ற நேரங்களில் மினி பஸ்கள் குடியாத்தம் சாலையிலும் அல்லது காட்பாடி அருகிலும் ஏதோ ஒரு இடத்தில் நிறுத்தப்படுகின்றன. மினி பஸ் திட்டத்தின் பயன் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து மினி பஸ்கள் முறையாக இயக்கப்பட வேண்டும்.
-மு.முருகேசன், கரசமங்கலம்.