பழையபடி கலவை சாலையில் அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-08-20 11:25 GMT

ஆற்காட்டில் உள்ள கலவை சாலை, செய்யாறு சாலைகளில் வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், கருவூல அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியைவகள் உள்ளன, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலவை செல்லும் அனைத்து அரசு பஸ்களும் ஆற்காட்டில் உள்ள கலவை சாலை வழியாக செல்லும். இதனால் இந்த அலுவலகங்களுக்கு செல்லும் நபர்கள் டவுன் பஸ்களில் செல்வார்கள். இதனால் பயணச் செலவு குறையும். ஆனால் தற்ேபாது ஆற்காட்டில் இருந்து கலவை செல்லும் பஸ்கள் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன. இதனால் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நபர்கள் ஆட்டோவில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மீண்டும் பழையபடி ஆற்காட்டில் உள்ள கலவை சாலை வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுமா?

மாலிக் பாஷா ஆற்காடு

மேலும் செய்திகள்