நெல்லை டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து வழுக்கு ஓடை வழியாக தென்காசி நோக்கி செல்லும் சாலையில் ஒருவழிப்பாதையை மீறி சிலர் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், வேன்களில் எதிர் திசையில் வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நேரிடுகின்றன. எனவே இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.