போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்

Update: 2026-06-14 15:55 GMT

கரூர் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியைக் கடந்து செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சிக்னல் இல்லாததால் முறைப்படுத்தப்படாமல் சென்று அடிக்கடி சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், சாலையைக் கடக்கும் பொதுமக்களும் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் உடனடியாகப் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்