சென்னை, வேலூரில் இருந்து வரும் பஸ்களில் பயணிகள் ராணிப்பேட்டைக்கு டிக்கெட் கேட்டால் ‘‘அங்கு ஸ்டேஜ் கிடையாது, வாலாஜா டோல்கேட் அல்லது ஆற்காடு பைபாசில் மட்டுமே பஸ் நிற்கும்’’ எனக் கண்டக்டர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே இரவில் குடும்பத்துடன் வருபவர்கள் வாலாஜா டோல்கேட் பகுதியில் இறங்கி அங்கிருந்து ராணிப்பேட்டைக்கு ஆட்டோ மூலம் செல்ல வேண்டி உள்ளது. அரசு விரைவுப் பஸ்கள் ராணிப்பேட்டை நகரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ராணிப்பேட்டை பைபாஸ் ரோடு பகுதியில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரவீன்குமார், வாலாஜா.