பஸ் வசதி செய்து தரப்படுமா?

Update: 2023-08-06 13:06 GMT

திருவண்ணாமலையில் நான்கு மாடவீதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடப்பதால், அந்த வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்கள் செங்கம் பிரிவு சாலையில் இருந்து அரசு கலைக் கல்லூரிக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க கிரிவலப்பாதை வழியாக பஸ் வசதி செய்து தரப்படுமா?

-குமார், சமூக ஆர்வலர், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்