போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்கள்

Update: 2023-09-10 17:18 GMT

போளூர் பஸ் நிலையத்தின் உள்ளே பேரூராட்சி சார்பில் கடை நடத்துபவர்கள் இரு சக்கர வாகனங்களை வழியிலேேய நிறுத்தி விட்டு செல்கின்றனா். இதனால் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு சிரமமாக உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து பஜாருக்கு செல்லும் வழியில் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை தெரு போன்ற இடங்களில் இரு சக்கர வாகனங்களை வழியிலே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனகளை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-கோபி, போளூர்.

மேலும் செய்திகள்