ஆற்காட்டில் அண்ணா சாலை, பஜார் சாலை ஆகிய பகுதிகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ளது. இந்தப் பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் தங்களது வாகனங்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை சாலையிலேயே விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணிகண்டன், சமூக ஆர்வலர், ஆற்காடு.